Sunday, March 15, 2009

பல்லாயிரம் மைல்கள் கடக்கும்




பல்லாயிரம் மைல்கள் கடக்கும்


பறவையொன்றின் நினைவில்


திசையாய் நீளுபவை
சிறகுணரும் காற்றின் கீதமா


வெளி மிதக்கும் மித வெப்பமா


நீளும் மண் வாசமா


சுவாசம் தாங்கும் இணையின் வாசமா


நினைவில் அழுந்தும்


திசை பற்றிய குறிப்புகளா



வருடதிற்கொரு முறை வந்தாலும்


வழி தப்பாமல் வந்து விடுகின்றன


சரணாலயதிற்குப் பறவைகள்.



கட்டிடங்கள்


அடையாளங்கள்


நினைவிடங்கள்


குழம்பித் திரியும் நினைவுகளில்



கோடுகள் இல்லா பாதைகள்


இல்லை என்பதும்



சரணாலயம் என்றொன்று


வாய்ப்பதில்லை என்பதுமே



தொலைக்கும் பாதைகளுக்கான

காரணங்களாகின்றன.